5730.

சங்குகள்முழங்க, பேரி சகடைகள் இடியின் வீழ,
வெங் குரல்திமிலையோடு கடுவையின் மரங்கள்
                           வீங்க,
தொங்கலின்குழாமும் தூளி வெள்ளமும் விசும்பைத்
                           தூர்க்க,
திங்களின்குடைகள் பூப்ப, திசைக் களிறு இரிய,-
                           வந்தான்.*

     சங்குகள் முழங்க- சங்குகள் ஒலிக்கவும், பேரி சகடைகள் இடியின்
வீழ -
பெருமுரசு, டமாரம் ஆகிய வாத்தியங்கள் இடிபோல முழக்கமிடவும்;
வெங்குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்க -
கொடிய ஒலியை
உடைய திமிலை, கடுவை என்னும் வாத்திய ஒலிகளால் மரங்கள் அதிரவும்;
தொங்கலின் குழாமும் -
மாலைக் கூட்டமும்; தூளி வெள்ளமும் - 
புழுதித்திரளும்; விசும்பைத் தூர்க்க - ஆகாயத்தை இல்லாதபடி
அடைக்கவும்;திங்களின் குடைகள் பூப்ப - சந்திரனைப் போல இடை
இடையே குடைகள்பொலிவுறத் தோன்றவும்; திசைக் களிறு இரிய - திக்கு
யானைகள் நடுங்கவும்;வந்தான் -வந்தான்.                      (14)