கலிவிருத்தம் 

5738.

எண்பதினாயிர கோடி இருஞ் சிலை
புண் பயில் வெஞ்சரம் பூட்டினர், ஒன்றோ ?
விண் புகுதோரணம் மெல்ல மறைந்த;
மண் புகழ்சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான்.*

     எண்பதினாயிரகோடி இருஞ்சிலை - எண்பதாயிரகோடிக்கணக்கான
விற்களை; புண்பயில் வெஞ்சரம் பூட்டினர் - புண்ணிற் பழகிய கொடிய
அம்புகளைப் பூட்டியவர்களாய் விடத் தொடங்கினர்; ஒன்றோ - அம்மட்டோ;
விண்புகு தோரணம் மெல்ல மறைந்த -
வானைத் தீண்டும் தோரணமானது
மெல்ல மறைந்து போயிற்று; மண்புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் -
உலகு ஏத்தும் புகழாளனாகிய அனுமன் பெரும் போரால் வாழ்ந்தான்
ஆயினன்.

     தோரணவாயில்அனுமன் இருப்பிடம் ஆதலின் அதனை மறைத்த
படைப் பெருக்கம், மாறாதிருக்கும் பெருந்தீனியாய் அமைவது
 என்பதால்
'மாருதிவாழ்ந்தான்' என்றார் போலும். ஒன்றோ - வியப்புச்சொல்.       (22)