5741.

சங்கொடுதாரைகள், சச்சரி, சின்னம்,
எங்கும்இயம்பின; பேரி இடித்த;
வெங் குரலின்பறை விண்ணில் நிறைந்த;
பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார்.*

     சங்கு, தாரை,சச்சரி, சின்னம் எங்கும் இயம்பின - வாத்தியங்கள்
எங்கும் ஒலித்தன; பேரி இடித்த - பெருமுரசு இடியொலி எழுப்பியது;
பறையின் வெங்குரல் விண்ணில் நிறைந்த -
பறைகளின் கொடிய சப்தம்
ஆகாயத்தில் நிரம்பியது; அரக்கர் பொங்கி பொருக்கென வந்தார் -
அரக்கர்கள் சீறி விரைவாக வந்தார்கள்.

     சச்சரி என்பதுபெருந்தாளம் ஆம் - 'சங்கொடு' எண்ணொடு பிரித்துப்
பொருள் தொறும் கூட்டுக.                                    (25)