| 5748. | தூளி மிடைந்து, உருத் தோன்றல் ஆகி, யாளி அனானைஅறிந்திலன் ஆகி, சூழுறநோக்கினன், சோதனை பெற்றான்; கோள் அமைந்துஅன்னவை கூறுதலுற்றான்.* |
தூளி மிடைந்து -புழுதிமேலே நெருங்கி; உரு தோன்றல ஆகி - வடிவு பார்க்க முடியாமல்; யாளி அன்னானை - சிங்கம் போன்ற இந்திர சித்துவை; அறிந்திலன் ஆகி - கண்டறியாதவனாகி; சோதனை பெற்றான் - சோதித்து அறிதல் பெற்றானாய்ச்; சூழ் உற நோக்கினன் - சுற்றிலும் நன்றாகப் பார்த்தான்; கோள் அமைந்து - தன் எண்ணம் நிரம்பப் பெற்று; அன்னவை - அத்தன்மைகளை; கூறுதல் உற்றான் - சொல்லத் தொடங்கினான். படைப்பெருக்கத்தால் தூசி மிகுந்தது. இந்திரசித்துவை மறைத்தது. அதனால் அனுமன் காணாதவனாய்ச் சோதனையால் அறிந்தான் என்பதாகும். (32) |