5748.

தூளி மிடைந்து, உருத் தோன்றல் ஆகி,
யாளி அனானைஅறிந்திலன் ஆகி,
சூழுறநோக்கினன், சோதனை பெற்றான்;
கோள் அமைந்துஅன்னவை கூறுதலுற்றான்.*

     தூளி மிடைந்து -புழுதிமேலே நெருங்கி; உரு தோன்றல ஆகி -
வடிவு பார்க்க முடியாமல்; யாளி அன்னானை - சிங்கம் போன்ற இந்திர
சித்துவை; அறிந்திலன் ஆகி - கண்டறியாதவனாகி; சோதனை பெற்றான் -
சோதித்து அறிதல் பெற்றானாய்ச்; சூழ் உற நோக்கினன் - சுற்றிலும்
நன்றாகப் பார்த்தான்; கோள் அமைந்து - தன் எண்ணம் நிரம்பப் பெற்று;
அன்னவை -
அத்தன்மைகளை; கூறுதல் உற்றான் - சொல்லத்
தொடங்கினான்.

     படைப்பெருக்கத்தால் தூசி மிகுந்தது. இந்திரசித்துவை மறைத்தது.
அதனால் அனுமன் காணாதவனாய்ச் சோதனையால் அறிந்தான் என்பதாகும்.
                                                     (32)