5750. | சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன் முந்தி எழுந்துமுனிந்தமை நோக்கி, 'வெந் திறலாய்! விரைவின் வருக !' என்றான்; 'இந்திரசித்துஇவன்' என்பது இசைத்தான்.* |
சிந்தைஉவந்தவன் ஆகி - (அனுமன்) மனமகிழ்ச்சிஅடைந்து; அரக்கன் முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி - இந்திர சித்து முற்படச் சீறிப் புறப்பட்டதைப் பார்த்து; 'வெந்திறலாய்- கொடிய வலிமை உடைய இந்திரசித்தே !; விரைவின் வருக' - சடுதியில் போர்க்கு வருக; என்றான் - என்று அழைத்தான்; இவன் இந்திரசித்து என்பது இசைத்தான் - இவன் இந்திரசித்து என்பதனை (ஒருவன்) எடுத்துக் கூறினான். முன்பாட்டுடன்இப்பாட்டு அந்தாதித் தொடைபோல் அமைந்தது காண்க. (34) |