5751. | என்று அவன்மாற்றம் இயம்புதல் கேட்டு, குன்றம் எனும் புயவானர வீரன், 'நன்று இது !நன்று இது ! என்ன நயந்தான்; சென்று அணைவுற்றதுஅரக்கன சேனை;* |
என்று அவன்மாற்றம் இயம்புதல் கேட்டு - ஒருவன் 'இவன் இந்திரசித்து' என்று சொல்லியதைக் கேட்டு; குன்றம் எனும் புய வானர வீரன் - மலை போன்ற தோள் உடைய அனுமன்; 'நன்று இது ! நன்று இது ! என்ன நயந்தான் - நல்லது நல்லது என்றுரைத்துப்போரை விரும்பினான் (இந்நிலையில்); அரக்கனசேனை - இந்திர சித்துவின் சேனை; சென்று அணைவுற்றது - (அனுமன்இருந்த தோரண வாயிலைச்) சென்று சேர்ந்தது. அவன் என்பது'இவன் இந்திர சித்து' என்று கூறிய அரக்கனைச் சுட்டியதாகக் கொள்ளப் பொருள் நேரிதாகும். (35) |