5756.

சென்றனன்என்ப மன்னோ; திசைகளோடு உலகம்
                          எல்லாம்
வென்றவன் இவன்என்றாலும், வீரத்தே நின்ற வீரன்,
அன்று அது கண்டஆழி அனுமனை, 'அமரின்
                          ஆற்றல்
நன்று' என உவகைகொண்டான்; யாவரும் நடுக்கம்
                           உற்றார்.

     சென்றனன் இவன்- இவ்வாறாகப் போருக்குச் சென்ற இந்த
மேகநாதன்; திசைகளோடு உலகம் எல்லாம் வென்றவன் என்றாலும் -
எட்டுத் திக்குகளோடு மூவுலகங்களையும் வென்று புகழ் பெற்றவனாயினும்;
வீரத்தே நின்ற வீரன் -
வீரத் தன்மையிலே நிலை பெற்ற மகாவீரன்
(ஆதலால்); அன்று அது கண்ட - அந்நாளில் போர்க்களச் சிதைவாகிய
வீரச் செயலைப் புரிந்த; ஆழி அனுமனை - கடல் போன்ற காம்பீரியத்
தோற்றத்து
 அனுமனைக் குறித்து;அமரின் ஆற்றல் - (இவனது) போர்
வல்லமை; நன்று என - நன்றாயுள்ளது என்று பாராட்டி; உவகை
கொண்டான் -
மகிழ்ச்சி கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார் - அது
கண்டோர் அனைவரும் (என்ன விளையுமோ) என்று அச்சம் அடைந்தார்கள்.

ீ     வீரச் செயலின்அருமை பெருமைகளை அறிந்து பாராட்டுவது உயர்ந்த
வீரர்க்கு இயல்பு. மேகநாதன் வீரத்தே நின்ற வீரன் ஆதலால், அனுமனைப்
பாராட்டி, அமரின் ஆற்றல் நன்று என உவகை கொண்டான் என்க. என்ப;
மன்; ஓ - அசை நிலைகள்.                                 (40)