5759. | கண்அனார், உயிரே ஒப்பார், கைப் படைக்கலத்தின் காப்பார், எண்ணல் ஆம்தகைமை இல்லார், இறந்து இடைக் கிடந்தார்தம்மை மண்ணுளே நோக்கிநின்று, வாய் மடித்து, உருத்து, மாயாப் புண்ணுளே கோல் இட்டன்ன மானத்தால், புழுங்குகின்றான். |
கண்அனார் -கண்போன்று அருமையானவரும்; உயிரே ஒப்பார் - தன் உயிர் போன்றவரும்; கைபடைக்கலத்தின் காப்பார் - தாம் தாம்கைதேர்ந்துள்ள ஆயுதங்களைக் கொண்டு, தம்மவர்களைக் காப்பவரும்; எண்ணல்ஆம் - நினைத்தற்கும் இயலாத; தகைமை இல்லார் - பெருமையுடையவருமாகி; இறந்து - அனுமனால் உயிர்நீத்து; இடை கிடந்தார் தம்மை - அவ்விடத்திலே விழுந்து கிடந்த அரக்க வீரர்களை; மண்ணுளே நோக்கி நின்று - போர்க்களத்திலே பார்த்து நின்று; வாய் மடித்து உருத்து - உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு கோபித்து; மாயாபுண்ணுளே கோல் இட்டு அன்ன - ஆறாத புண்ணிலே கோலைக் கொண்டு குத்தினாற் போல; மானத்தால் புழுங்குகின்றான் - அவமானத்தால் (இந்திரசித்து) (உடலும் உள்ளமும்) கொதிக்கின்றவனானான். பல சிறப்பிற்குஉரிய வீரர்கள் போர்க்களத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்தபோது, இந்திரசித்தன் மனம் மிகவும் வருந்தியது. அவ்வருத்தம் புண்ணில் கோல் நுழைந்தால் போன்று ஆயிற்று என்பதாம். (43) |