5767.

'கட்டு ஏறு,நறுங் கமழ் கண்ணி, இக் காளை என்
                           கைப்
பட்டால், அதுவேஅவ் இராவணன் பாடும் ஆகும்;
"கெட்டேம்" எனஎண்ணி, அக் கேடு அருங்
                          கற்பினாளை
விட்டு ஏகும்; அதுஅன்றி, அரக்கரும் வெம்மை
                          தீர்வார்.

     நறுங் கமழ்கண்ணி - மிக்க மணம் வீசுகின்ற மாலையை அணிந்த;
இக்கட்டேறு காளை - இந்த வீர வெறிகொண்ட காளை போல்வான்; என்
கைப்பட்டால் -
என் கையால் இறந்தால்; அதுவே அவ் இராவணன் பாடும்
ஆகும் -
அச்செயலே அந்த இராவணன் அழிவாகவும் முடியும்; 'கெட்டேம்'
என எண்ணி -
(ஆகவே இராவணன்) இனி நாம் தவறாமல் அழிவோம்
என்று நினைத்து; அக்கேடு அருங் கற்பினாளை விட்டு ஏகும் - அந்தக்
கெடுதல் இல்லாத கற்பினளான சீதா பிராட்டியை (இராமபிரானிடம்) கொண்டு
வந்து விட்டுச் செல்வான்; அது அன்றி - அதுவும் அல்லாமல்; அரக்கரும்
வெம்மை தீர்வார் -
அரக்கர்களும் தமது செருக்கு அடங்கிக் கொடுமை
ஒழிவார்கள்.

     இந்திரசித்துஅழிந்தால் இராவணன் அழிவான். இராவணன் வலிமைக்கு
இந்திரசித்தே மூலமாவான் என்பது அனுமன் கருத்து.                (51)