5768. | 'ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ? ஒண்மையானைக் கொன்றேன்எனின், இந்திரனும் துயர்க் கோளும் நீங்கும்; இன்றே, கடிகெட்டது, அரக்கர் இலங்கை; யானே வென்றேன், அவ்இராவணன்தன்னையும், வேரொடு' என்றான். |
ஒண்மையானை -ஒளியுற்றஇந்த இந்திரசித்தை; கொன்றேன் எனின் - நான் கொன்றேன் என்றால்; இதனால் வரும் ஊதியம் ஒன்றோ - இந்தச் செயலால் விளையக்கூடிய நன்மை ஒன்று தானோ !; இந்திரனும் துயர் கோளும் நீங்கும் அரக்கர் இலங்கை இன்றே கடி கெட்டது - இந்திரனும் துயர் கொண்டிருத்தலை நீங்கும் அரக்கர்களுடைய இலங்கை நகரம் இன்றே காவல் ஒழிந்ததாம்; அவ் இராவணன் தன்னையும் வேரொடு யானே வென்றேன் - அந்த இராவணனையும் வேரோடு நானேவென்றவனாவேன்; என்றான் - என்று (அனுமன்) எண்ணினான். இந்திரசித்தின்அழிவினால் ஏற்படும் நன்மைகளை அனுமன் எண்ணினான் என்பதாம். ஒண்மை - ஒளி; ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. (52) |