இந்திரசித்தும்அனுமனும்  பலவகையாகப் பொருதல்

5775.

சிகை எழும்சுடர் வாளிகள், இந்திரசித்து,
மிகை எழும்சினத்து அனுமன்மேல் விட்டன, வெந்து,
புகை எழுந்தன,எரிந்தன, கரிந்தன போத,-
நகை எழுந்தன,அழிந்தன, வான் உளோர் நாட்டம்.

     மிகை எழும்சினத்து அனுமன் மேல் - பொங்கி எழும் கோபத்தை
உடைய அனுமன்மீது; இந்திர சித்து விட்டன - இந்திர சித்து
(தூரத்திலிருந்துதொடுத்து) விட்டவையாகிய; சிகை எழும் சுடர் வாளிகள் -
கொழுந்துவிட்டுஎரியும் அம்புகள்; வெந்து புகை எழுந்தன - வெந்து புகை
கிளம்பப்பெற்றவையும்; எரிந்தன கரிந்தன - எரியப்பட்டொழிந்தவையும்,
தீய்ந்துபோனவையுமாய்; போத - (அவன் உடலைச் சிறிதும்)
ஊறுபடுத்தாதொழிய;நகை எழுந்தன - (அது கண்ட இந்திரசித்துக்குக்
கோபத்தால்) சிரிப்புஉண்டாயின; வான் உளோர் நாட்டம் அழிந்தன -
(இனி என்னாகுமோ என்று அஞ்சி மனம் கலங்கியதனால்) தேவர்களுடைய
கண்களும் கலக்கம்அடைந்தன.

     அனுமனதுசினத்தீச்சுடர், இந்திரசித்து வீசிய அம்புகளைச் சுட்டுப்
பயனற்றவை ஆக்கின என்பது கருத்து.                          (59)