5780.

'நாளுக்குஎல்லையும், நிருதராய் உலகத்தை நலியும்
கோளுக்குஎல்லையும், கொடுந் தொழிற்கு
                   எல்லையும், கொடியீர் !
வாளுக்குஎல்லையும் வந்தன; வகை கொண்டு
                           வந்தேன்
தோளுக்கு எல்லைஒன்று இல்லை' என்று அனுமனும்
                          சொன்னான்.

     கொடியீர் ! -கொடியஅரக்கர்களே !; நாளுக்கு எல்லையும் -
உங்கள் வாழ்நாளுக்கு ஒரு முடிவும்; நிருதராய் உலகத்தை நலியும்

கோளுக்கு எல்லையும் -அரக்கர்களாய் உலகத்தை வருத்தும் உங்கள்
கொள்கைக்கு ஒரு முடிவும்; கொடும் தொழிற்கு எல்லையும் - உங்கள்
கொடிய செய்கைகளாகிய பாவத்திற்கு ஒரு முடிவும்; வாளுக்கு எல்லையும்
வந்தன -
உங்கள் வாள் முதலிய படைக்கலங்களுக்கு ஒரு முடிவும் இப்போது
வந்துவிட்டன; வகை கொண்டு வந்தேன் - அதற்குரிய உபாயங்கொண்டு
இங்கேயான் வந்துள்ளேன்; தோளுக்கு எல்லை ஒன்று இல்லை - (ஆனால்)
என் தோளாற்றலுக்கு முடிவு சிறிதும் உண்டாகாது; என்று, அனுமனும்
சொன்னான் -
இவ்வாறு அனுமனும் இந்திரசித்துக்கு மறுமொழி கூறினான்.
                                                          (64)