5781. | 'இச் சிரத்தையைத் தொலைப்பென்' என்று, இந்திரன் பகைஞன், பச்சிரத்தம்வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப, வச்சிரத்தினும்வலியன, வயிர வான் கணைகள், அச் சிரத்தினும்மார்பினும் அழுத்தலும்-அனுமன். |
இந்திரன்பகைஞன் - (அது கேட்டு)இந்திரசித்து; 'இ சிரத்தையை தொலைப்பென்'என்று - (இந்தக் குரங்கின்) இந்த நம்பிக்கையை அழித்துவிடுவேன்' என்று கருதி; அச்சிரத்தினும் மார்பினும் - அந்த அனுமனுடைய தலையிலும் மார்பிலும்; பச்சு இரத்தம் வந்து ஒழுகிட - புதிய இரத்தம் வந்து ஒழுகும்படியும்; வானவர் பதைப்ப - (அது கண்டு) தேவர்கள் துடிக்கும்படியாகவும்; வச்சிரத்தினும் வலியன வயிரவான் கணைகள் - வச்சிராயுதத்தைக் காட்டிலும் வலிமை உடையனவான கூர்மையான பெரிய அம்புகளை; அழுத்தலும் - அழுந்த எய்த போது; அனுமன் - , நெடுஞ்சினங் கொண்டுநிமிர்ந்தான் என அடுத்த கவியோடு முடியும். (65) |