5782.

குறிதுவான் என்று குறைந்திலன், நெடுஞ்சினம்
                              கொண்டான்,
மறியும் வெண்திரை மா கடல் உலகு எலாம்
                              வழங்கி,
சிறிய தாய்சொன்ன திருமொழி சென்னியில் சூடி,
நெறியில் நின்றதன் நாயகன் புகழ் என,
                              நிமிர்ந்தான்.

     கொடும்சினம் கொண்டான் - (கணைகள் அழுந்தப் பெற்ற அனுமன்)
கொடிய கோபம் கொண்டு; வான் குறிது என்று குறைந்திலன் - ஆகாயம்
உயர்வு போதாது என்று தன் வடிவு குறுகாதவனாய் (வான்முகட்டி)னும்
மேலாக வளர்ந்து); சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி -
தன் சிறியதாயான கைகேயி சொன்ன கட்டளை மொழிகளைத் தன் தலையால்
ஏற்று; மறியும் வெண் திரை மாகடல் உலகு எலாம் வழங்கி - மடங்குகின்றவெண்மையான அலைகளை உடைய பெரிய கடலினால்
சூழப்பட்ட உலகம்முழுவதையும் (தன் தம்பியாகிய பரதனுக்கு) அளித்து;
நெறியில் நின்ற தன்நாயகன் புகழ் என -
அறநெறியில் தங்கி நின்ற
தனது தலைவனானஇராமபிரான் புகழேபோல; நிமிர்ந்தான் - பேருரு
எடுத்துக் கொண்டுநின்றான்.

     இராமபிரான்புகழ் அனுமனின் நெடுமைக்கு உவமை கூறப்பட்டது. (66)