5783.

பாகம்அல்லது கண்டிலன்; அனுமனைப் பார்த்தான்;
மாக வன் திசைபத்தொடும் வரம்பு இலா உலகிற்கு
ஏக நாதனை எறுழ்வலித் தோள் பிணிந்து ஈர்த்த
மேக நாதனும்,மயங்கினனாம் என வியந்தான்.

     மாகவன் திசை -பெரியவானம் முதலான; பத்தொடும் - வலிய
திசைகள் பத்துடன்; வரம்பு இலா உலகிற்கு ஏகநாதனை - அளவற்ற
உலகங்களுக்கு எல்லாம் தனித்தலைவனான இந்திரனை; எறுழ் வலித் தோள்
பிணிந்து  ஈர்த்த  மேகநாதனும் -
மிக்க வலிமையை உடைய தோள்களைக்
கட்டி இழுத்த இந்திரசித்தும்; அனுமனைப் பார்த்தான் பாகம் அல்லது
கண்டிலன் -
அனுமனைப் பார்த்து, அவனது உருவில் ஒரு சிறு பகுதியே
அல்லாமல் முழு உருவும் காணாதவனாகி; மயங்கினன் ஆம் என
வியந்தான் -
திகைப்புண்டவன் போல ஆச்சரியமுற்றான்.          (67)