5788.

நூறு நூறுபோர் வாளி, ஓர் தொடை கொடு,
                              நொய்தின்,
மாறு இல் வெஞ்சினத்து இராவணன் மகன் சிலை
                             வளைத்தான்;
ஊறு, தன் நெடு மேனியில், பல பட, ஒல்கி,
ஏறு சேவகன்தூதனும், சிறிது போது இருந்தான்.

     மாறு இல் வெம்சினத்து இராவணன் மகன் - எதிர் இல்லாத கொடியகோபத்தை உடைய இராவணனது மகனான இந்திரசித்து; போர்வாளி
நூறுநூறு ஓர் தொடை கொடு -
போரிற் சிறந்த நூறு நூறு அம்புகளை ஒரு
தொடுப்பிலே கொண்டு; நொய்தின் சிலை வளைத்தான் - விரைவில்,
அவ்வில்லை வளைத்து எய்தான்; ஏறு சேவகன் தூதனும் - சிறந்த
வீரனாகிய இராமபிரானுடைய தூதனான அனுமனும்; தன் நெடு மேனியில்
ஊறு பலபட -
(அந்த அம்புகளால்) தனது பெரிய உடம்பில் பல புண்கள்
உண்டாக; சிறிது போது ஒல்கி இருந்தான் - சிறிது நேரம்
தளர்ச்சியுற்றிருந்தான்.

     ஏறு சேவகன்; 'ஏறுசேவகனார்' - (திருவாய்மொழி 6.1.9) பகைவர்
திரளிலும் ஏறிய (மதிக்கப் பெற்ற) வீரம் உள்ளவர் - என்பது முன்னோர்
உரை.                                                (72)