5789. | ஆர்த்தவானவர் ஆகுலம் கொளீஇ, அறிவு அழிந்தார்; பார்த்த மாருதி,தாரு ஒன்று அங்கையில் பற்றி, தூர்த்த வாளிகள்துணிபட முறை முறை சுற்றி, போர்த்த பொன்நெடு மணி முடித் தலையிடைப் புடைத்தான். |
ஆர்த்த வானவர்- முன்புமகிழ்ச்சியால் ஆரவாரம் செய்த தேவர்கள்;ஆகுலம் கொளீஇ அறிவு அழிந்தார் - (அனுமான் தளர்ச்சி உற்றது கண்டு)துன்பம் கொண்டு அறிவு கலங்கினார்கள்; பார்த்த மாருதி தாரு ஒன்றுஅம்கையில் பற்றி - அதுகண்ட அனுமன், (உடனே தளர்ச்சி நீங்கி) ஒருமரத்தைத் தனது அழகிய கையிலே எடுத்துக் கொண்டு; தூர்த்த வாளிகள்முறை முறை துணிபட - (இந்திரசித்து) எய்து நிரப்புகின்ற அம்புகள் எல்லாம்வரிசை வரிசையாகத் துண்டு பட்டொழியும்படி; சுற்றி - அந்த மரத்தைச் சுற்றிவீசி; பொன்மணி நெடுமுடி போர்த்த தலையிடை - பொன்னாலும்மணியாலும் செய்து நீண்டதாய் விளங்கிய கிரீடம் கவித்துள்ள இந்திரசித்தின்தலையிடத்து; புடைத்தான் - (அம்மரத்தாலே) ஓங்கி அடித்தான். (73) |