5790.

பார மா மரம் முடியுடைத் தலையிடைப் படலும்,
தாரையின் நெடுங்கற்றைகள் சொரிவன தயங்க,
ஆர மால் வரைஅருவியின் அழி கொழுங் குருதி
சோர நின்றுஉடல் துளங்கினன்-அமரரைத்
                            தொலைத்தான்.

     அமரரைத்தொலைத்தான் - தேவர்களை வென்றவனானஇந்திரசித்து;
முடியுடைத் தலையிடை -
கிரீடம் அணிந்த தனது தலையின் மேல்; பார
மாமரம் படலும் -
வலியதும் பெரியதுமான அந்த மராமரம் பட்ட அளவிலே;
நெடும் கற்றைகள் தாரையின் சொரிவன தயங்க -
(கீரிடத்தில் உள்ள
மாணிக்கங்களின்) நீண்ட ஒளித் தொகுதிகள் ஒழுங்காக மேற்
சொரிவனவற்றைப் போன்று விளங்கும்படி; மால் வரை அருவியின் - பெரிய
மலையிலிருந்து வருகின்ற நீர் அருவிபோல; அழி கொழுங்குருதி ஆர சோர
-
வழிகின்ற கொழுமையான இரத்தம் மிகுதியாகப் பெருக; நின்று, உடல்
துளங்கினான் -
(ஏங்கித் தளர்ச்சியுற்று) நின்று, உடம்பு நடுங்கினான்.   (74)