| 5791. | நின்று,போதம் வந்துறுதலும், நிறை பிறை எயிற்றைத் தின்று, தேவரும்முனிவரும் அவுணரும் திகைப்ப, குன்றுபோல் நெடுமாருதி ஆகமும் குலுங்க, ஒன்று போல்வன,ஆயிரம் பகழி கோத்து உய்த்தான். |
நின்று - (இந்திரசித்து)சிறிது போது அயர்ச்சியுற்று நின்று; போதம் வந்து உறுதலும் - பிறகு அறிவு வந்து கூடின அளவில்; நிறை பிறை எயிற்றை தின்று - தன் வாயில் நிறைந்துள்ளனவும் பிறைச்சந்திரன் போன்றனவுமான பற்களைக் கோபத்தினால் கடித்து; தேவரும், முனிவரும் அவுணரும் திகைப்ப - தேவர்களும் இருடிகளும் அசுரர்களும் யாதாகுமோ என்று ஏக்கமுற; குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க - மலை போன்ற உயர்ந்த வடிவமுள்ள அனுமனது உடலும் நடுங்க; ஒன்று போல் வன - ஒரே தன்மையான (வேறுபாடு இல்லாத); ஆயிரம் பகழி கோத்து உய்த்தான் - ஆயிரம் அம்புகளை, வில்லில் பூட்டி அனுமன் மீது செலுத்தினான். (75) |