அயன் படைக்குஅடங்கிய அனுமனிடம் இந்திரசித்து வருதல் | 5798. | தணிப்பஅரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ் தறுகண் பணிக்குலங்களுக்கு அரசினது உருவினைப் பற்றி, துணிக்க உற்று,உயர், கலுழனும் துணுக்குற, சுற்றிப் பிணித்தது, அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க. |
தணிப்பு அரும் -எவராலும் அடக்குதற்கு அரியதான; பெரும் படைக்கலம் - பெரிய அந்த அத்திரமானது; தழல் உமிழ் தறுகண் - கனல் வீசும் கொடுமை வாய்ந்த; பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி - பாம்புக் கூட்டங்களுக்கு அரசனுடைய வடிவத்தை ஏற்றுக் கொண்டு; துணிக்க உற்று உயர் கலுழனும் - அதனைத் துண்டிக்க வந்த உயர எழும் கருடனும்; துணுக்குற - அஞ்சும்படி; அப் பெரு மாருதி தோள்களை பிறங்க சுற்றி பிணித்தது - அந்தப் பெரிய அனுமன் தோள்களை நன்றாகச் சுற்றிக் கொண்டு கட்டிவிட்டது. பாம்புகளை எளிதில் அழிக்கும் தன்மையதான கருடனும் அஞ்சும்படி, பெரும் பாம்பின் வடிவத்துடன் சென்ற பிரமாத்திரம் அனுமன் தோள்களைப் பிணித்தது என்க. (82) |