அயன் படையில்கட்டுண்ட அனுமன் தோற்றம்

5802.

'குரக்குநல் வலம் குறைந்தது' என்று, ஆவலம்
                           கொட்டி
இரைக்கும் மாநகர் எறி கடல் ஒத்தது; எம்
                           மருங்கும்
திரைக்கும்மாசுணம் வாசுகி ஒத்தது; தேவர்,
அரக்கர்ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன், அனுமன்.

     குரக்கு நல் வலம்- குரங்கினுடைய நல்ல வலிமை; குலைந்தது
என்று-
நிலை கெட்டது என்று எண்ணிக் களித்து; ஆவலம் கொட்டி
இரைக்கும்மாநகர்  - 
வாய்விட்டு உரக்கக்கத்தி, முழக்கமிடும் அந்தப்
பெரிய இலங்கைநகரம்; எறிகடல் ஒத்தது - அலைமோதும் கடலை
ஒத்திருந்தது;எம்மருங்கும் திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது -
எப்புறமும் அனுமன்உடலைச் சுற்றிப் பிணித்த பிரம்மாத்திரமாகிய பாம்பு
வாசுகி என்னும் பாம்பைஒத்து விளங்கியது; அரக்கர் தேவர் ஒத்தனர் -
அரக்கர்கள், முன் கடல்கடைந்த தேவர்களை ஒத்து விளங்கினர்; அனுமன்
மந்தரம் ஒத்தனன் -
(நாக பாசத்தால் சுற்றப் பட்ட) அனுமன், (வாசுகியால்
சுற்றப்பட்ட) மந்தரமலையைப் போன்று விளங்கினான்.             (86)