| 5821. | 'நீரிடைக்கண் துயில் நெடிய நேமியும், தாருடைத் தனிமலர் உலகின் தாதையும், ஓர் உடல்கொண்டு, தம் உருவம் மாற்றினர், பாரிடைப்புகுந்தனர் பகைத்து' என்பார் பலர்.* |
நீரிடை கண்துயில் நெடிய நேமியும் - திருப்பாற்கடலில்பள்ளி கொண்டுள்ள பெரிய சக்கராயுதத்தை உடைய திருமாலும்; தார் உடை தனிமலர் உலகின் தாதையும் - தாமரை மலர் மாலை அணிந்து உலகத்தைப் படைத்தவனான பிரம்மதேவனும்; பகைத்து - அரக்கர்களோடு பகைமை கொண்டு; ஓர் உடல் கொண்டு உருவம் மாற்றினர் - சேர்ந்து ஓர் உடலைத்தாங்கி, தமது வடிவை மாற்றிக் கொண்டவர்களாய்; பாரிடை புகுந்தனர் - நிலவுலகத்தில் வந்து பிரவேசித்துள்ளார். என்பார் பலர் - என்று கருதினர் பல அரக்கர்கள். பிரம்மாவும்திருமாலும் தாமான தனித்தனி நிலையில் அரக்கர்களை அழிக்கும் வலிமையற்றவர்களாய், ஒன்று ஆகிக் குரங்கின் வடிவில் வந்தனர் எனக்கருதினர் பலர். (17) |