5824. | 'எந்தையதுஅருளினும், இராமன் சேவடி சிந்தை செய்நலத்தினும், சீதை, வானவர், தந்து உளவரத்தினும், தறுகண் பாசமும் சிந்துவென்;அயர்வுறு சிந்தை சீரிதால்; |
எந்தையதுஅருளினும் - என் தந்தையான வாயுதேவனது கருணையினாலும்; இராமன் சேவடி சிந்தை செய் நலத்தினும் - இராமபிரான்சிவந்த திருவடிகளை யான் தியானம் செய்யும் புண்ணியத்தாலும்; சீதை,வானவர் தந்துள வரத்தினாலும் - சீதா பிராட்டியும் தேவர்களும் கொடுத்துள்ள வரங்களினாலும்; தறுகண் பாசமும் சிந்துவென் - கொடிய இந்தப் பிரம்மாத்திரத்தையும் அற்றி சிதறிவிடச் செய்யவல்லேன் யான்; அயர்வுறு சிந்தை சீரிது - (ஆயினும்) இதனால் நான் களைப்புற்றமனத்தோடு இருப்பதே சிறப்புடைத்தாகும். 'அயர்வுறு சிந்தைசீரிது' என்ற தன் காரணம் அடுத்த நான்கு கவிகளில் விளங்கும். அதற்காகத்தான், அனுமன், அரக்கர்கள் தன்னைக் கட்டி ஈர்த்துச் செல்ல அடங்கியிருந்தான், என்பதாம். ஆல் - அசை. (20) |