இந்திரசித்துஅனுமனை இராவணன் மாளிகைக்குக் கொண்டு செல்லுதல்

5829.

கடவுளர்க்கு அரசனைக் கடந்த தோன்றலும்,
புடை வரும் பெரும் படைப் புணரி போர்த்து எழ,
விடைபிணிப்புண்டது போலும் வீரனை,
குடை கெழு மன்னன்இல், கொண்டு போயினான்.

     கடவுளர்க்குஅரசனை - (இவ்வாறாக) தேவர்களுக்கு தலைவனான
இந்திரனை; கடந்த தோன்றலும் - வென்ற வீரனான இந்திரசித்தும்;
புடைவரும் பெரும் படை புணரி -
பக்கங்களில் சூழ்ந்து வருகின்ற பெரிய
சேனையாகிய கடல்; போர்த்து எழ - கவிந்து வர; விடை பிணிப்புண்டது
போலும் வீரனை -
ஒரு காளை கட்டுண்டது போல விளங்கும் அனுமனை;
குடைகெழு மன்னன் இல் -
கொற்றக் குடையோடு விளங்கும் அரசனாகிய
இராவணனது அரண்மனைக்கு; கொண்டு போயினான் - கொண்டு சென்றான்.

     விடை,ஆண்மைக்கும் பெருமிதத்துக்கும் உறைவிடமானது.      (25)