5831.

கேட்டலும்-கிளர் சுடர் கெட்ட வான் என
ஈட்டு இருள்விழுங்கிய மார்பின், யானையின்
கோட்டு எதிர்பொருத பேர் ஆரம் கொண்டு, எதிர்
நீட்டினன்-உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான்.

     கேட்டலும் -அதனைக்கேட்டவுடன்; உவகையின் நிமிர்ந்த
நெஞ்சினான் -
மகிழ்ச்சியால் ஓங்கிய மனமுடைய இராவணன்; கிளரீ சுடர்
கெட்ட வான் என -
விளங்குகின்ற (இரவில்) சந்திரன் ஒழியப் பெற்ற
ஆகாயம் போல; ஈட்டு இருள் விழுங்கிய - செறிதலுள்ள இருளினால்
விழுங்கப்பட்ட (மிகக்கறுத்த); மார்பின் - தன் மார்பினிடத்து; யானையின்
கோடு எதிர் பொரு -
(முன்) திக்கஜங்களின் தந்தங்களோடு புரண்டு மோதிக்
கொண்டிருந்த; பேர் ஆரம் கொண்டு எதிர் நீட்டினான் - பெரிய
முத்துமாலையைக் கழற்றிக் கொண்டு (நற்செய்தி சொன்ன தூதர்க்கு)
வெகுமதியாகக் கொடுத்தான்.

     தூதுவர் கூறியநற்செய்தி இராவணனை எவ்வளவு மகிழ்வித்துள்ளது
என்பதை, அவன் தூதுவர்க்குக் கொடுத்த முத்து மாலைப் பரிசு
தெரிவிக்கின்றது.                                           (27)