5836.

'உற்றுஉண்டாய விசும்பை உருவினாய்,
முற்றுண்டாய்;கலை யாவையும் முற்றுறக்
கற்றுண்டாய்; ஒருகள்ள அரக்கனால்
பற்றுண்டாய்;இதுவோ அறப் பான்மையே ?

     உற்று உண்டாயவிசும்பை - மிகப் பரந்துள்ளதானஆகாயத்தை;
உருவினாய் முற்றுண்டாய் -
ஊடுருவிச் சென்று அளவளாவி நிறைந்து;
கலையாவையும் முற்றுற கற்றுண்டாய் -
சகல கலைகளையும் முழுவதும்
பொருந்த (சூரிய பகவானிடம்) கற்றுத் தேர்ந்தாய் (அப்படிப்பட்ட நீ); ஒரு
கள்ள அரக்கனால் -
ஒரு
 வஞ்சனை உடையஇராக்கதனால்; பற்றுண்டாய் -
சிறைப்படுத்தப் பெற்றாய்; அறப்பான்மை இதுவோ - அறத்தின் இயல்பு
இதுதானோ ?

     'சகல கலைகளையும்கற்ற நீ, ஒரு கள்ள அரக்கனால் கட்டுண்டாயே'
என்று அனுமனைப் பாராட்டி வருந்தினாள் பிராட்டி. ஆற்றலும் அறிவும்
பெற்றவர்கள் நன்மை அடைதல்தான் அறத்தின் பான்மை. இங்கு, அதற்கு நேர்
மாறான பயன் ஏற்பட்டுள்ளதால் அறத்தின் பான்மையோ ! என்று சீதா
பிராட்டி ஐயமுற்றாள் என்க.                                  (32)