5837. | 'கடர் கடந்து புகுந்தனை; கண்டகர் உடர் கடந்தும்நின் ஊழி கடந்திலை; அடர் கடந்ததிரள் புயத்து ஐய ! நீ இடர்கள்தந்தனை, வந்து இடர் மேலுமே ? |
நீ கடர் கடந்துபுகுந்தனை - நீ, கடலைக் கடந்துஇங்கு வந்தாய்; கண்டகர் உடர் கடந்தும் - முள் போன்று கொடியவர்களான பல அரக்கர்களுடைய உடம்பின் வலிமையை அழித்து வெற்றி கொண்டு நின்றும்; நின் ஊழி கடந்திலை - உனது வாழ்நாள் ஒழியப் பெற்றிலை (இவ்வாறு); அடர் கடந்த திரள் புயத்து ஐய ! - பகைவர் வலிமையை வென்ற பருத்த தோள்களை உடைய ஐயனே ! (நீ அரக்கர்கள் கையில் சிக்கியதனால்); வந்து இ்டர் மேலும் இடர்கள் தந்தனை - (கிட்கிந்தையினின்று) இங்கு வந்து எனக்குத் துன்பத்தின் மேலும் துன்பங்களை உண்டாக்கியவனானாய். இராமபிரானைப்பிரிந்ததனாலான துன்பத்தின் மேலும், இராம தூதன் பகைவர் கையில் கட்டுண்டதனாலான துன்பம் சேர்ந்து மேன்மேலும் வருத்துதலால் 'வந்து இடர்கள் மேலும் இடர் தந்தனை என்று பிராட்டி கூறி வருந்தினாள். (33) |