இந்திரசித்து,அனுமனை அரண்மனையுள் கொண்டு சேர்தல் 5841. | பெருந் தகைப் பெரியோனைப் பிணித்த போர் முருந்தன், மற்றைஉலகு ஒரு மூன்றையும் அருந் தவப்பயனால் அரசு ஆள்கின்றான் இருந்த, அப்பெருங் கோயில் சென்று எய்தினான். |
பெருந் தகைப்பெரியோனை - பெருமைக் குணத்திலும்அறிவிலும் பெரியோனான அனுமனை; பிணித்த போர் முருந்தன் - கட்டிய, போரில் வல்லவனான இந்திரசித்து; மற்றை உலகு ஒரு மூன்றையும் - இலங்கையோடல்லாது மற்ற (சுவர்க்கம் பூமி பாதலம்) மூன்று உலகங்களையும்; அரும் தவப்பயனால் - தான் முன் செய்த அரிய தவப் பயனால்; அரசு ஆள்கின்றான் இருந்த - அரசனாயிருந்து ஆள்கின்ற இராவணன் தங்கியிருந்த; அ பெருங் கோயில் - அந்தப் பெரிய அரண்மனையில்; சென்று எய்தினான் - சென்று அடைந்தான். இராவணன்தங்கியிருந்த அரண்மனைக்கு, இந்திரசித்து, அனுமனைக் கட்டிய நிலையில் கொண்டு சென்றான் என்பதாம். முகுந்தன் - சமர்த்தன்; திறமை வாய்ந்தவன். முருந்து - பறவைகளின் வலிய அடிக் குருத்து. பறவையின் அடிக்குருத்து போன்று, இராவணனுக்கு உதவுபவன் இந்திரசித்து என்பது கருத்து. (37) |