கலிநிலைத்துறை

5842.

தலங்கள்மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்தென்ன
அலங்கல்வெண்குடைத் தண் நிழல் அவிர் ஒளி
                                     பரப்ப,
வலம் கொள்தோளினான் மண்நின்று வான் உற
                                     எடுத்த,
பொம் கொள் மா மணி வெள்ளியங்குன்று எனப்
                                     பொலிய,

     அலங்கல்வெண்குடை - முத்து முதலியமணிச்சரங்கள் அசையப்
பெற்ற வெண் கொற்றக் குடையானது; தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதிதழைத்து என்ன - மூவுலகங்களுக்கும் ஒளி வீசும் படி, வேறு ஒரு
சந்திரன்சிறந்து விளங்குவது போல; தண் நிழல் அவிர் ஒளி பரப்ப -
குளிர்ச்சியானநிழலையும் விளங்குகின்ற ஒளியையும் பரவச் செய்யவும்; வலம்
கொள்தோளினால் -
தன் வலிமை கொண்ட தோள்களால்; மண் நின்று
வான் உறஎடுத்த -
தரையிலிருந்து ஆகாயத்தை அளாவுமாறு மேலே
தூக்கிய; பொலம்கொள் மாமணி வெள்ளியம் குன்று என பொலிய -
அழகு கொண்டபெரிய சிறந்த கயிலையங் கிரியாகிய  வெள்ளி மலைபோல,
விளங்கவும்.

     'இருந்த' என(55வது பாடல்) முடியும்.  குடைக்கு மதியும்,
வெள்ளியங்கிரியும் உவமைகளாகக் கூறப்பட்டன.                   (38)