5843. 
 

புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும்,
தள் இல்முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும்,
கள் உயிர்க்கும்மென் குழலியர் முகிழ் விரல் கதிர்
                           வாள்
வள் உகிர்ப்பெருங் குறிகளும், புயங்களில் வயங்க,

     புள் உயர்த்தவன்திகிரியும் - கருடப் பறவை விளங்க
உயர்த்தப்பெற்றகொடியை உடைய திருமாலினது சக்கராயுதமும்; புரந்தன்
அயிலும் -
இந்திரனது வச்சிராயுதமும்; தள் இல்
 முக்கணான் கணிச்சியும்-
விலக்கமுடியாத, முக்கண்ணனாகிய சிவபிரானது சூலாயுதமும்; தாக்கிய
தழும்பும் -
தம் மீது பட்டு உண்டாக்கிய வடுக்களும்; கள் உயிர்க்கும்
மென் குழலியர் -
தேனைச் சொரியும் மிருதுவான கூந்தலைஉடைய தன்
காதல் மகளிர்; முகிழ் விரல் - அரும்பு போல் குவிந்தவிரல்களில் உள்ள;
கதிர்வாள் வள் உகிர் - சுடரோடு கூடிய வாள் போன்றகூரிய நக
நுனிகளால் உண்டாகிய; பெரும் குறிகளும் புயங்களில் வயங்க -பெரிய
அடையாளங்களும் பெரிய தோள்களில் விளங்கவும்.

     இராவணனதுவீரத்துக்கும் காதலுக்கும் அடையாளமாக விளங்குகின்றன
அவன் தோள்களில் காணப்படும் வடுக்கள் என்பது கருத்து.          (39)