5849. | ஏகநாயகன்தேவியை எதிர்ந்ததன் பின்னை, நாகர் வாழ்இடம் முதல் என, நான்முகன் வைகும் மாக மால்விசும்பு ஈறு என, நடுவண வரைப்பில் தோகைமாதர்கள், மைந்தரின் தோன்றினர், சுற்ற, |
ஏக நாயகன்தேவியை எதிர்ந்ததன் பின்னை - (எல்லா உயிர்கட்கும்)தனித்தலைவனான இராமபிரானுடைய தேவியாகிய பிராட்டியைச் சந்தித்துநோக்கிய பிறகு; நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்மாகமால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் - நாகர்கள் வாழும்இடமான பாதாளலோகம் முதலாக, பிரம்மதேவன் வாழ்கின்ற பெரிய வானில்உள்ள ஆகாயமான சத்தியலோகம் ஈறாக, இடையில் உள்ள ஏனைய உலகங்கள் அனைத்திலும் உள்ள; தோகை மாதர்கள் - மயில் போன்ற சாயலை உடைய மகளிர்கள்; மைந்தரின் சுற்ற தோன்றினர் - (இராவணன் பார்வைக்கு) ஆடவர்கள் என்னுமாறு அவனைச் சூழ்ந்து விளங்கவும். பிராட்டியைப்பார்த்த பிறகு இராவணன் கண்களுக்கு, பிற எந்த உலகத்து அழகிய மகளிர்களும், காம எண்ணம் உண்டாக்கும் தன்மையற்ற ஆடவர்களாகவே தோற்றினர் என்பது கருத்து. (45) |