5851.

நரம்புகண்ணகத்துள் உறை நறை, நிறை பாண்டில்
நிரம்புசில்லரிப் பாணியும், குறடும், நின்று இசைப்ப,
அரம்பைமங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல்
வரம்பு இல்இன்னிசை, செவிதொறும் செவிதொறும்
                          வழங்க.*

     நரம்பு கண்அகத்து உள் உறை நறை - நரம்புக் கருவியாகிய
வீணைமுதலிய இசைக்கருவிகளினிடத்து உள்ளே தங்கியுள்ள இசையாகிய
தேனும்;நிறை பாண்டில் - இலக்கணம் நிறைந்த கஞ்சக் கருவியும்; நிரம்பு
சில்லரிபாணியும் -
நிரம்பிய சில்லரி என்னும் வாத்தியத்தாளமும்; குறடும் -
குறடுஎன்னும் தாளக் கருவியும்; நின்று இசைப்ப - இடையறாது நிலை நின்று
ஒலிக்கவும்; அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால் அன்ன பாடல் -
தேவமகளிர் அமிழ்தத்தைச் சிந்தினால் போன்ற வாய்ப்பாட்டினது; வரம்பு இல்
இன்னிசை -
அளவிறந்த இனிமையை உடைய இசையை; செவி தொறும்
செவி தொறும் வழங்க -
தனது இருபது காதுகளிலும் வந்து சொரியவும்.

     நறை, பாண்டில்,பாணி, குறடு என்பவை நின்று இசைப்ப, அரம்பை
மங்கையர் பாடல் இசை செவி தொறும் செவி தொறும் வயங்க என்க. பாணி -
கை; அதனால் வரையறுத்து இடப்படுகிற தாளத்துக்கு இலக்கணை. பாடல்
இன்னிசை - வாய்ப்பாட்டின் இனிய கீதம்; நறை - இசைத்தேன்.       (47)