5852.

கூடு பாணியின் இசையொடும், முழவொடும் கூட,
தோடு சீறுஅடிவிழி மனம் கையொடு தொடரும்
ஆடல்நோக்குறின், அருந் தவ முனிவர்க்கும்
                         அமைந்த
வீடு மீட்குறும்மேனகைமேல், நகை விளங்க.+

     பாணியின் கூடு -தாளத்தோடு கூடிய; இசையொடும் - பாட்டுடனும்;
முழவொடும் -
மத்தள ஒலியுடனும்; கூட - மாறுபடாது ஒத்துவருமாறு;
தோடு சீறு அடி -
பூவிதழினும் மேம்பட்ட சிறிய பாதச் சதிவரிசை; விழி
மனம் கையொடு தொடரும் -
விழிப்பார்வை, அதிலேயே ஒன்றிய மனம்,
கையினால் காட்டும் அபிநயக் குறிகள் ஆகியவை ஒன்றாக அமைந்த; ஆடல்
நோக்குறின் அரும் தவமுனிவர்க்கும் -
நாட்டியத்தைப் பார்த்தால்,
அருமையான தவத்தைச் செய்கின்ற முனிவர்களும்; அமைந்த வீடு மீட்குறும்
-
(தமக்கு) உளதாகும் முத்தியின்பத்தைக் கைவிட்டு (தன்மேல்) மனம்
திரும்பும் படிச் செய்கின்ற; மேனகை மேல் - மேனகை என்னும் தேவமாதின்
மேல்; நகைவிளங்க - மகி்ழ்ச்சியால் சிரிப்புத் தோன்றவும்.

     அருந்தவமுனிவரையும் தன் பால் இழுக்கும் வண்ணம் நாட்டியம்
ஆடும் மேனகையைத் தன் அருகில் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்தான்
இராவணன் என்பது கருத்து.                                  (48)