5855. | 'காந்தள்மெல் விரல் சனகிதன் கற்பு எனும் கடலை நீந்தி ஏறுவதுஎங்ஙன் ?' என்று ஒரு முகம் நினைய, சாந்து அளாவியகொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார் ஏந்தும் ஆடியின்ஒரு முகம் எழிலினை நோக்க, |
ஒரு முகம் -இராவணனுடைய மற்றொரு முகம்; காந்தள் மெல்விரல் சனகிதன் கற்பு எனும் கடலை - செங்காந்தள் மலர் போன்ற மென்மையான விரல்களை உடைய சீதையின் கற்பு என்ற கடலை; நீந்தி ஏறுவது எங்ஙன் என்று நினைய - நீந்திக்கரை ஏறுவது எவ்வாறு என்று நினைத்து ஏக்கமுறவும்; ஒரு முகம் - மற்றொருமுகம்; சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் - சந்தனம் பூசிய கொங்கைகளை உடைய அழகிய மாதர்கள் பலர்; தன் சூழ்ந்தார் ஏந்தும் ஆழியின் - தன்னைச் சூழ்ந்து கொண்டு கையில் தாங்கிக் காட்டுகின்ற கண்ணாடியில்; எழிலினை நோக்க - தனது அழகினைப் பார்க்கவும். 'கற்பெனும் கடலைநீந்தி ஏறுவது' என்றது உருவகம். சீதையை அபகரித்து வருவதற்குக் கருங்கடலைக் கடந்தது எளிதாயிற்று; ஆனால், சீதையின் கற்புக் கடலைக் கடப்பது அரிது என்பது உணர்த்தப்பட்டது. இராவணன், பிராட்டியின் மேனியைக் கொணர்ந்து வரலாம்; ஆனால் அவளது ஆன்ம குணங்களை வசப்படுத்த முடியாது என்பது குறிப்பு. பிராட்டியை வசப்படுத்தற்கேற்ற அழகு, தனக்கு இருக்கிறதா என்று ஒருமுகம், மகளிர் ஏந்திய கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தது என்க. (51) |