கலி விருத்தம்

5865.

'கொல்லலாம் வலத்தனும் அல்லன்; கொற்றமும்
வெல்லலாம்தரத்தனும் அல்லன்; மேலை நாள்
அல் எலாம்திரண்டன நிறத்தன் ஆற்றலை
வெல்லலாம்இராமனால்; பிறரும் வெல்வரோ ?

     கொல்லல் ஆம்வலத்தனும் அல்லன் - (இவன்) யாராலும்எளிதில்
கொல்லக் கூடிய வலிமை உடையவனும் அல்லன்; கொற்றமும் - இவனது
படைப் பெருக்கை நோக்குமிடத்து; வெல்லல் ஆம் தரத்தனும் அல்லன் -
எவராலும் வெல்லத்தக்க நிலைமை உடையவனும் அல்லன்; மேலை நாள் -
பழங்காலமுதல்; அல் எலாம் திரண்டான நிறத்தன் ஆற்றலை - இருள்
முழுதும் ஒருங்குகூடினாற் போன்ற கருநிறம் உடையவனான இராவணனது
(வளர்ந்து வந்துள்ள) வலிமையை; இராமனால் வெல்லல் ஆம் -
இராமபிரான் ஒருவனால்தான் வெல்லுதல் கூடும்; பிறரும் வெல்வரோ ? -
வேறுயாரேனும் இவனை வெல்வார்களோ ? (மாட்டார் என்றபடி).

     இராவணன்,இராமபிரானால் அன்றி, வேறுயாராலும் கொல்லப் படவோ,
வெல்லப்படவோ முடியாதவன் என அனுமன் உணர்ந்தான் என்பது கருத்து.
கொற்றம் - படைப் பெருக்கு. 'நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்' (சீவக.
201)                                                     (61)