5866. | 'என்னையும்வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்- தன்னையும்வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால், அன்னவேகாலங்கள் கழியும்; ஆதலான், துன்ன அருஞ்செருத் தொழில் தொடங்கல் தூயதோ ? |
என்னையும்இவனுக்கு வெலற்கு அரிது - என்னை வெல்லுதலும் இந்த இராவணனுக்கு அரியதாகும் (முடியாது); ஈண்டு - இவன் முன்னிலையில்; இவன் தன்னையும் வெலற்கு எனக்கு அரிது - இவ்வளவு துணைவலிமை உடைய இவனை வெல்லுதலும் எனக்கும் அரியதாகும் (முடியாது) (ஆகவே); தாக்கினால் - இவனை எதிர்த்துப் போர் தொடங்கினால்; காலங்கள் அன்னவே கழியும் - பலகாலங்கள் அத்தாக்குதலாகவே கழிந்து விடும்; ஆதலால் - ஆகையால்; துன்ன அரும் செரு தொழில் துடங்கல் தூயதோ? - பிறர் நெருங்குதற்கு அரிய போர்த்தொழிலைத் தொடங்குவது நல்லதோ ?(அன்று என்றபடி). போர்த்தொழில்தொடங்குதல் தூயது அன்று என்ற முடிவுக்கு வந்தான் அனுமன். (62) |