5871. | புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடந்- தவனை உற்று,'அரி உருவான ஆண்தகை, சிவன் எனச்செங்கணான் எனச் செய் சேவகன், இவன்' எனக் கூறிநின்று, இரு கை கூப்பினான்.+ |
புவனம் எத்தனைஅவை - உலகங்கள் எத்தனை உண்டோ அவை; அனைத்தும் போர் கடந்தவனை உற்று - எல்லாவற்றையும் போரில் வென்றவனாகிய இராவணனை (இந்திரசித்து) அடைந்து; அரி உருவான ஆண்தகை இவன் - குரங்குவடிவில் உள்ள ஆண்மைக்குணமுடையவனான இவன்; சிவன் என செங்கணான் என - சிவபிரான் போலவும் திருமால் போலவும்; செய்சேவகன் - போர் செய்த சிறந்த வீரன்; என கூறி - என்று எடுத்துச் சொல்லி; நின்று - எதிரே நின்று; இருகை கூப்பினான் - இரண்டு கைகளையும் குவித்து வணங்கினான். இ்ந்திரசித்துஅனுமனை இராவணனுக்கு அறிமுகப்படுத்திய முறை கூறப்பட்டது. (67) |