5883.

'காரணம்கேட்டிஆயின், கடை இலா
                     மறையின்கண்ணும்,
ஆரணம்காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும்,
                     அன்னோன்;
போர் அணங்குஇடங்கர் கவ்வ, பொது நின்று,
                    "முதலே" என்ற
வாரணம் காக்கவந்தான்; அமரரைக் காக்க வந்தான்;

     காரணம் கேட்டிஆயின் - அந்த முழுமுதற் பொருள் ஒரு
அரசனுக்குமகனாகத் தோன்றுவதற்குக் காரணம் என்ன வென்று
கேட்பாயானால்; கடைஇலா மறையின் கண் ஆரணமும் - முடிவில்லாத
(அனந்தமான)வேதங்களிடத்துள்ள உபநிடதங்களும்; காட்டமாட்டா - இவன்
இத்தன்மையன்என்று முழுவதும் அறிவிக்க முடியாதவனும்; அறிவுக்கு
அறிவும் அன்னோன்-
எல்லாப் பொருள் தன்மைகளையும் அறிகின்ற
அறிவானவனும் ஆகியபரம்பொருள்; போர் அணங்கு இடங்கர் கவ்வ -
(அன்று) போரிட்டுஎதிர்த்துத் துன்பத்தைத் தரும் முதலை கவ்விக்கொள்ள,
(அதனால் வருந்தி);பொதுநின்று முதலே என்ற - (இன்ன கடவுள் என்று
பெயர் குறிப்பிடாமல்)பொதுப் பட ஆதிமூலமே என்று கூவி அழைத்து நின்ற;
வாரணம் காக்கவந்தான் -
யானையை (கஜேந்திரனை) பாதுகாப்பதற்கு ஓடி
வந்தான்;அமரரைக் காக்க வந்தான் - (இன்று) தேவர்களைப்
பாதுகாப்பதற்குஅவதரித்துள்ளான்.

     கடை இலாமறையின் ஆரணமும் காட்ட மாட்டாதவனும், அறிவினுக்கு
அறிவும் அன்னோனு மாகிய பரம் பொருளே, அன்று, வாரணம் காக்க
வந்தான், இன்று (இப்பொழுது) அமரரைக்காக்க வந்தான் என்று
இராவணனுக்கு அனுமான் உணர்த்தினான் என்க. ஆரணம் - வேதத்தின்
ஞானகாண்டமாகிய உபநிடதம். காட்டுதல் - அறிவித்தல்.             (79)