இராவணன், மேலும்சில வினாக்கள் தொடுக்க,
அனுமன் நிகழ்ந்தமைவிவரித்தல்

5889.

'என்னுடைஈட்டினால், அவ் வாலியை எறுழ் வாய்
                            அம்பால்
இன் உயிர்உண்டது ? இப்போது யாண்டையான்
                            இராமன் என்பான் ?
அன்னவன்தேவிதன்னை அங்கதன் நாடலுற்ற
தன்மையைஉரைசெய்க' என்ன, சமீரணன் தனயன்
                            சொல்வான்;

     இராமன் என்பான்- (அதுகேட்ட இராவணன்) இராமன் என்பவன்;
என்னுடை ஈட்டினால் - எந்த வகையால் பெற்ற வலிமை கொண்டு;
அவ்வாலியை -
அந்த வாலியை; எறுழ்வாய் அம்பால் இன் உயிர்
உண்டது -
வலிய நுனியை உடைய அம்பால் அவன் இனிய உயிரை
அழித்தது ?; இப்போது யாண்டை யான் - அந்த இராமன் இப்போது எங்கே
இருக்கிறான் ?; அன்னவன் தேவி தன்னை
 அங்கதன் நாடல்உற்ற
தன்மையை -
அவனுடைய மனைவியாகியசீதையை (அவனால் கொல்லப்பட்ட
வாலியின் மகனான) அங்கதன் தேடத் தொடங்கிய நிலைமையை (வகையை);
உரை செய்க என்ன - சொல்வாயாக' என்று இராவணன் கேட்க; சமீரணன்
தனயன் சொல்வான் -
வாயுகுமாரனான அனுமான் அதற்குப் பின்வருமாறு
மொழி கூறினான்.

     இராவணன் கேட்டகேள்விகள் இரண்டு. ஒன்று வாலியைக் கொன்ற
இராமபிரானைப் பற்றியது; மற்றொன்று, கொல்லப்பட்ட வாலியின்
மகனாயிருந்தும் அங்கதன், இராமனது மனைவியைத் தேட வந்த நிலைமை
பற்றியது. ஈடு - வலிமை. 'ஒருகரியீடழித்து' (தேவாரம்) எறுழ் - வலிமை
உணர்த்தும் உரிச்சொல். சமீரணன் - நன்றாகச் சஞ்சரிப்பவன் என்னும்
பொருளது வாயு தேவன்.                                      (85)