5890.

'தேவியை நாடி வந்த செங்கணாற்கு, எங்கள்
                               கோமான்,
ஆவி ஒன்று ஆகநட்டான்; "அருந் துயர் துடைத்தி"
                               என்ன,
ஓவியர்க்கு எழுதஒண்ணா உருவத்தன்,
                               உருமையோடும்
கோ இயல்செல்வம் முன்னே கொடுத்து,
                       வாலியையும் கொன்றான்.

     தேவியை நாடிவந்த செங்கணாற்கு - தனது தேவியாகியசீதையைத்
தேடித் கொண்டு வந்த, சிவந்த கண்களை உடைய இராமபிரானுக்கு; எங்கள்
கோமான் -
எங்கள் தலைவனான சுக்கீரீவன்; ஆவி ஒன்று ஆக நட்டான்
-
இருவர்க்கும் ஓர் உயிர் போல நட்புக்கொண்டவனாகி; அரும் துயர்
துடைத்தி என்ன -
(எனக்கு வாலியால் ஏற்பட்டுள்ள) போக்குதற்கு அரிய
துன்பத்தைப் போக்கியருளுக என்று வேண்டிக்கொள்ள; ஓவியர்க்கு எழுத
ஒண்ணா உருவத்தன் -
சித்திரம் தீட்டுதலில் வல்லவர்க்கும் எழுத முடியாத
வடிவழகு உடைய இராமபிரான்; உருமை யோடும் கோஇயல் செல்வம்
முன்னே கொடுத்து -
சுக்கிரீவன் மனைவியாகிய, ருமையையும், வானர
அரசினுக்கு உரிய செல்வத்தையும் முன்னதாக அவனுக்கு அளிப்பதாக
வாக்குறுதி கொடுத்து; வாலியையும் கொன்றான் - பிறகு வாலியையும்
அழித்து விட்டான்.

     கவரப்பட்டமனைவியை உரியவனுக்கே தந்த வள்ளல், தன்
மனைவியைப் பிறன் கவரப் பார்த்திருப்பானோ ? உறுதியாக மீட்பான் என்ற
உண்மையை இராவணனுக்குக் குறிப்பாக உணர்த்துகின்றான் அனுமான்.  (86)