| 5895. | 'தூது வந்தது, சூரியன் கான்முளை ஏது ஒன்றிய நீதிஇயைந்தன; சாது என்றுஉணர்கிற்றியேல், தக்கன, கோது இறந்தன,நின் வயின் கூறுவாம்; |
சூரியன் கான்முளைதூது வந்தது - யான், இங்கு,சூரியகுமாரனான சுக்கிரீவனது தூதாக வந்தது ஆகும்; (நான் சொல்லுவன) எது ஒன்றிய - தக்ககாரணங்கள் பொருந்தியவையும்; நீதி இயைந்தன - நீதியோடு கூடியவையும்; தக்கன - உன் நன்மைக்கு ஏற்றவையும்; கோது இறந்தன - குற்றமற்றவையும் ஆகும்; சாது என்று உணர் கிற்றியேல் - அவை நல்லனவே என்று நீ உணர்வாயானால்; நின்வயின் கூறுவாம் - உன்னிடத்தில் சொல்வேன். கான்முளை (கால்- முளை) பரம்பரையில் தோன்றினவன்; புத்திரன். (91) |