5897.

' " போய் இற்றீர், நும் புலன் வென்று போற்றிய
வாயில் தீர்வுஅரிதாகிய மா தவம்-
காயின் தீர்வுஅருங் கேடு அருங் கற்பினாள்,
தீயின் தூயவளைத்துயர் செய்ததால்.

     காயின் தீர்வுஅரும் - தான் கோபித்தால் தடுக்க முடியாததும்; கேடு
அரும் கற்பினாள் -
அழியாததுமான பதிவிரதா தருமத்தை உடையவளும்;
தீயின் தூயவளை -
நெருப்பினும் தூய்மை உடையவளுமான பிராட்டியை;
துயர் செய்ததால் -
நீர் துன்பப்படுத்தியதால்; நும்புலன் வென்ற போற்றிய
-
உமது ஐந்து புலன்களையும் வென்று அடக்கிக் காத்து வந்ததும்; வாயில்
தீர்வு அரிதாகிய மாதவம் போய் இற்றீர் -
வாயில் சொல்லி அடங்காத
பெருமை உடையதுமாகிய பெரிய தவத்தின் பயனை உங்களை விட்டு நீங்கி
ஒழியப் பெற்றீர்கள்.

     கற்பு, தீர்வுஅரியது; கேடு அரியது, மாதவம் போற்றியது; அரிதாகியது.
கற்புடைத் தூயவளுக்குத் துன்பம் இழைத்ததால், தவத்தின் பயன் போயிற்று
என்றவாறு.                                              (93)