5904.

' "ஓதநீர் உலகு ஆண்டவர், உன் துணைப்
போத நீதியர்,ஆர் உளர் போயினார் ?
வேத நீதி விதிவழி மேல்வரும்
காதல் நீ,அறத்து எல்லை கடத்தியோ ?

     ஓதம் நீர் உலகுஆண்டவர் போயினார் - அலைகளோடு கூடிய
நீரை உடைய கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தை அரசாட்சி செய்து, பின்
இறந்த அரசர்களுள்; உன் துணை போதம் நீதியர், ஆர் உளர் - உன்
அளவு அறிவும் நீதியும் பெற்றவர் யார் இருக்கின்றார் ?; வேதம் நீதி விதி
வழி மேல் வரும் காதல் நீ -
வேதங்களில் கூறப்பட்ட நியாயமான
முறைமைவழியிலே முன்னேறிச் செல்வதில் விருப்பம் கொண்ட நீ; அறத்து
எல்லைகடத்தியோ ?
தருமத்தின் வரையறையைக் கடந்து
ஒழுகக்கடவையோ ?(அல்லை என்றபடி);

     இராவணன்படித்துக் கெட்டவன் என்றும் நீதி தெரிந்து கெட்டவன்
என்றும் உணர்த்தப்பட்டது. போதம் - அறிவு.                    (100)