5906. | ' "பாரை ஞூறுவ பற் பல பொற் புயம், ஈர்-ஐஞ்ஞூறு தலைஉள; என்னினும்,- ஊரை ஞூறும் கடுங்கனல் உட்பொதி சீரை ஞூறு,அவை-சேமம் செலுத்துமோ ? |
பாரை ஞூறுவ பற்பலபொன் புயம் - உலகங்களை அழிக்கவல்ல மிகப்பல அழகிய கைகளும்; ஈர் ஐஞ்ஞூறு தலை உள என்னினும் - ஆயிரம் தலைகள் உனக்கு உள்ளன என்றாலும்; அவை சேமம் செலுத்துமோ - அவை, உன்னைப் பாதுகாக்க வல்லனவோ ? (வல்லனஅல்ல); அவை - (ஆனால்) அவைதாம்; ஊரை ஞூறும் கடும் கனல் உள் பொதிஞூறு சீரை - ஊர் முழுவதையும் அழிப்பதாய் வளர்ந்த கொடிய நெருப்பின் உள்ளே அகப்பட்ட நூறு சீலைகளே போலும். ஆயிரம் தலைகளும்பல கைகளும் உண்டானாலும் அவை உன்னைப் பாதுகாக்கமாட்டா; அவை யாவும், நெருப்பில் பட்ட சீலைப் பொதி போல இராமபிரானது அம்பினால் எளிதில்அழிந்து விடும் என்பதாம். (102) |