5907. 

' "புரம் பிழைப்பு அருந் தீப் புகப் பொங்கியோன்,
நரம்பு இழைத்தனபாடலின் நல்கிய
வரம்பிழைக்கும்; மறை பிழையாதவன்
சரம் பிழைக்கும்என்று எண்ணுதல் சாலுமோ ?

     புரம் பிழைப்புஅரும் தீபுக பொங்கி யோன் - திரிபுரங்களும்
தப்புதற்கு அரிய நெருப்பு மண்டி அழிக்குமாறு, கோபித்த சிவபெருமான்;
நரம்பு இழைத்தன பாடலின் - உன்கை நரம்புகளைக் கொண்டு நீ பாடிய
பாடல்களுக்காக; நல்கிய வரம் பிழைக்கும் - மனம் உவந்து கொடுத்தருளிய
வரமானது தவறினாலும் தவறும்; மறை பிழையாதவன் - வேத நெறி
தவறாதவனான இராமபிரானுடைய; சரம் பிழைக்கும் என்று எண்ணுதல்
சாலுமோ ? -
அம்பு தவறிப் போகும் என்று நினைத்தல் பொருந்துமோ ?
(பொருந்தாது என்றபடி);

     சிவபெருமான் இராவணனுக்குத் தந்த வரம் தவறினாலும் தவறலாம்;
ஆனால் இராமபிரானுடைய அம்பு தன் குறியினின்றும் தவறாது என்பதாம். 
                                                     (103)