5909.

' "பிறந்துளார், பிறவாத பெரும் பதம்
சிறந்துளார்,மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய்
இறந்துளார்,பிறர் யாரும், இராமனை
மறந்துளார் உளர்ஆகிலர்; வாய்மையால்.

     பிறந்துளார் -உலகில்நற்பிறவியில் பிறந்துள்ளவர்களும்; பிறவாத
பெரும் பதம் சிறந்துளார் -
பிறப்பற்ற வீட்டினைப் பெற்றுச் சிறந்தவர்களும்;
மற்றும் தேவர்க்கும் தேவராய் இறந்துளார் - மற்றும் தேவாதி
தேவர்களாகிமேம்பட்டவர்களும், ஆகிய; பிறர் யாரும் - (உன்னை ஒழிந்த)
மற்றையோர்அனைவரும்; இராமனை மறந்துளார் உளர் ஆகிலர் -
இராமபிரானைமறந்துள்ளவர்களாய் உள்ளவரே இல்லை; வாய்மை - இது
சத்தியம்

     இராவணனுக்குஇராமபிரானின் பெருமை உணர்த்தப்பட்டது. பெரும்
பதம் - பரம பதம்; இறத்தல் - கடத்தல்; இறந்துளார் - கடவுளர் என்றபடி. 
                                                    (105)