இராவணன் நகைத்துதூதனாகிய நீ அரக்கரைக்கொன்றது ஏன்? என்றல் 5911. | என்றலும்,'இவை சொல்லியது, எற்கு, ஒரு குன்றின் வாழும்குரங்குகொலாம் ! இது நன்று ! நன்று !என மா நகை செய்தனன்- வென்றி என்றுஒன்றுதான் அன்றி வேறு இலான். |
என்றலும் -என்றுஅனுமன் கூறியவுடன்; வென்றி என்று ஒன்று தான் அன்றி வேறு இலான் - வெற்றி என்று சொல்லப்படும் ஒன்றுதானே அல்லாமல், அதற்குமாறான தோல்வியை (இது நாள் வரை) அறியாதவனான இராவணன்; இவை எற்கு சொல்லியது - இச்செய்திகளை எனக்குச் சொன்னது; குன்றின் வாழும் குரங்கு கொல் ஆம் - மலையில் திரிந்து வாழும் ஒரு அற்பக் குரங்கு போலும் !; இது நன்று நன்று என மாநகை செய்தனன் - இது நன்றாய் இருக்கிறது என்று சொல்லி பெருஞ்சிரிப்புச் சிரித்தான். நன்று நன்று;அடுக்கு இகழ்ச்சிக்குறிப்பு. (107) |