இராவணன் அனுமனைக்கொல்மின் என வீடணன் தடுத்தல் 

5914.

என்னும்மாத்திரத்து, ஈண்டு எரி நீண்டு உக,
மின்னும் வாள்எயிற்றன், சினம் வீங்கினான்;
'கொல்மின்' என்றனன்; கொல்லியர் சேர்தலும்,
'நில்மின்' என்றனன், வீடணன் நீதியான்.

     என்னும்மாத்திரத்து - (இவ்வாறு அனுமன்அஞ்சாமலும்
அலட்சியமாகவும்) சொன்ன அளவில்; ஈண்டு எரி நீண்டு உக - நிறைந்த
நெருப்பு நெடுந்தூரம் போய்ச்சிந்த; மின்னும் வாள் எயிற்றன் - ஒளி விடும்
வாள் போலும் கோரப் பற்களை உடைய இராவணன்; சினம் வீங்கினான்
கொல்மின் என்றனன் -
சீற்றம் மிக்கவனாய் இந்தக் குரங்கைக் கொல்லுங்கள்
என்று கட்டளையிட்டான்; கொல்லியர் சேர்தலும் - கொலையாளிகள்
அனுமனை அடைதலும்; நீதியான் வீடணன் நில்மின் என்றனன் - நீதி
நெறியில் நடப்பவனான வீடணன் 'நில்லுங்கள்' என்று சொல்லிக்
கொலையாளியைத் தடுத்தான்.

     அனுமனதுஅஞ்சாமையும் அலட்சியப் பேச்சும், இராவணனது சீற்றப்
பெருக்கத்துக்குக் காரணமாயிற்று எனலாம்.                          (110)