5918.

'பகைப் புலன் நணுகி, உயத்தார் பகர்ந்தது பகர்ந்து,
                                     பற்றார்
மிகைப் புலன்அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம்
                                     பூண்ட
தகைப் புலக்கருமத்தோரைக் கோறலின், தக்கார்
                                    யார்க்கும்
நகைப் புலன்பிறிது உண்டாமே ? நம் குலம் நவை
                                   உண்டாமே !

     பகைப்புலன் நணுகி- பகைவர்களுடைய இடத்தை அச்சமில்லாது
சேர்ந்து; உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து - தம்மை அனுப்பியவர் சொல்லிய
செய்தியை உள்ளபடியே சொல்லி; பற்றார் மிகை புலன் அடக்கி - பகைவர்
கொள்ளும் கோப உணர்ச்சியைத் தமது சொல்லாற்றலால் அடக்கி; மெய்ம்மை
விளம்புதல் -
உண்மையான  சொல்லைச் சொல்லுதலையே; விரதம் பூண்ட
தகைப்புலம் கருமத் தோரை -
தமக்கு விரதமாகக் கொண்ட சீரிய
அறிவையும் செய்கையும் உடைய தூதுவரை; கோறலின் - நீ
கொல்லுதலினால்; தக்கார் யார்க்கும் நகைப்புலன் உண்டாமே -
அறிவினாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த மேலோர் யாவர்க்கும் இகழ்ந்து
சிரிப்பதற்கு இடம் உண்டாகுமே !; பிறிது நம் குலம் நவை உண்டாமே -
மற்றும், நம் குலத்துக்குக் குற்றம் உண்டாகுமே!;

     ஏகாரம் இரண்டும்தேற்றம். தூதர் தன்மைகளும் செயல்களும் நன்கு
விளக்கப்பட்டன.                                             (114)