| 5923. | நாட்டின்,நகரின், நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே- வீட்டின் ஊசல்,நெடும் பாசம் அற்ற; தேரும், விசி துறந்த; மாட்டும் புரவிஆயம் எலாம், மருவி வாங்கும் தொடை அழிந்த; பூட்டும் வல்லிமூட்டோடும் புரசை இழந்த, போர் யானை ! |
வீட்டின் ஊசல்நெடும் பாசம் அற்ற - (அரக்கர்களால்கொண்டு போகப்பட்டதனால்) வீடுகளில் உள்ள ஊஞ்சல்கள் தம் நீண்டகயிறுகள் அற்றன; தேரும் விசி துறந்த - தேர்களும் கட்டுக் கயிறுகளை இழந்தன; மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த - பிணிக்கப்பட்ட குதிரைக் கூட்டம் எல்லாம், கட்டி வாங்கும் கயிறுகள் ஒழியப் பெற்றன; போர் யானை பூட்டு வல்லி மூட்டோடும் புரசை இழந்த - போர்த்திறம் அமைந்த யானைகள் முடிச்சுடன் இடும் காற்கயிறுகளும், கழுத்தில் கட்டப்படும் கயிறுகளும் இல்லையாயின (என்றால்); நாட்டின் நகரின் நடு உள்ள கயிறு - அந்த நாட்டுப் புறத்திலும் நகரத்திலும் உள்ளனவான வெறுங்கயிறுகள்; நவி்லும் தகைமையவே - சொல்லும் தன்மையுடையன ஆகுமோ? (ஆகாது என்றபடி). அனுமனைக் கட்ட,கொண்டு வந்த கயிறுகள் பல திறப்பட்டனவாகும். இலங்கையில் கயிறு என்று காணப்பட்ட அனைத்தும் கொண்டு வரப்பட்டன என்க. (119) |